சாஸ்திரம் கூறும் சில தகவல்கள்.

* இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும். குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு சாப்பிடக்கூடாது.

* குரு, கர்ப்பிணி, நோயாளி, சன்னியாசி ஆகியோருக்கு ஆபத்து காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். அது மிகவும் புண்ணியம்.

* தாய்க்கு நிகரான அண்ணியை தினமும் வணங்க வேண்டும்.

* சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால், அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும்.

* இடது கையால் இருக்கையை தூக்கிப் போட்டால், ஆரோக்கியம் பாதிக்கும்.

* இடது கையால் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டால், பிள்ளைகளுக்கு பாதிப்பு வரும்.

* இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்.

* பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு போன்றவை எதிரில் குறுக்கிட்டால், அவற்றை வலதுபுறமாக சுற்றிச் செல்ல வேண்டும்.

ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக்கூடாது, மழை பெய்யும் போது ஓடக்கூடாது, நெருப்பை வாயால் ஊதக்கூடாது.

* குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு சாப்பிடக்கூடாது.

* கன்றுக்குட்டியைக் கட்டி வைத்திருக்கும் கயிற்றை தாண்டக்கூடாது.

* திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவரை, சுப காரியங்களில் முன்னிறுத்தக்கூடாது.

* சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

* சாப்பிடும் வேளை தவிர, மற்ற நேரங்களில் இடது கையால் தண்ணீரை அருந்தக்கூடாது.

* இருட்டில் சாப்பிடக்கூடாது. சாப்பிடும்போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

* சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால், அவற்றையெல்லாம் கிள்ளி எறிந்து விட வேண்டும்.

* மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

* குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி ஆகியோரை பார்க்கச் செல்லும் போதும், ஆலயத்திற்குச் செல்லும் போதும் வெறுங்கையுடன் செல்லக்கூடாது.

* தீ உள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக்கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் ஆகிய மூன்றும், பரிகாரம் இன்றி அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

* உடல் குறைபாடு உள்ளவர்கள் (மாற்றுத்திறனாளிகள்), ஆறு விரல் உள்ளவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையில் தவிப்பவர்கள் ஆகியோரின் குறையை குத்திக்காட்டி பேசக்கூடாது.

* பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமல் இருப்பது பாவம்.

* பசு மாட்டை, கோமாதாவாக எண்ணி, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

* வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

* நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

Leave A Reply

Your email address will not be published.