வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி.

நிந்தவூர் பிரதான வீதி GPS க்கு, முன்பாக இன்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் நிந்தவூர் 4ம், பிரிவைச் சேர்ந்த18 வயது மதிக்கத்தக்க நஜாத் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அக்கரைபற்று பக்கமிருந்து வந்துகொண்டிருத்த போது அதோ பக்கமிருந்து வந்த கென்டர் லொறியொன்று GPS சந்தியால் அரசடி ஊர் பக்கம் கிறுக முற்பட்ட போது குறித்த மோட்டார் சைக்கிள் வந்த வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து கென்டர் லொறியின் வலது பக்க ஓர வபறில் சைக்கிள் சிக்குண்டதால் மோட்டார் சைக்கிளில் வந்த இருபரும் ஓரத்தால் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த நபரோடு சேர்த்து தூக்கி வீசப்பட்டதால் மேட்டார் சைக்கிளில் வந்த இருபரில் ஒருவர் சம்ப இடத்தில்திலே உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் நித்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.