மோதல்களை தொடர சீனா விரும்பவில்லை- பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு அழைப்பு

எல்லை பிரச்சினையில் அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பாக, இந்திய பாதுகாப்புத்துறை உறுப்பினர் ராஜ்நாத் சிங் மீண்டும் முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இதன்போது, லடக்கில் வீரமரணமடைந்த இராணுவ வீரர்களின் தியாகம், துணிச்சலை நாடு மறக்காது என தெரிவித்த அவர், இராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.

அத்துடன் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை செய்தியாளர் ஜாவோ லிஜியான் செய்தியாளர்களை சந்தித்தித்த போது எல்லை தொடர்பான விவகாரங்களை பேச்சுவார்த்தை முலம் தீர்க்க இந்தியா முன்வரவேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இனி எந்த ஒரு மோதலையும் சந்திக்க சீனா விரும்பவில்லை. எல்லை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும்.

தூதரக ரீதியிலும் இராணுவ ரீதியிலும் சமரச முயற்சி நடைபெற்று வருகிறது. நடந்ததில் எது சரி, எது தவறு என்பதில் சீன அரசு தெளிவாக உள்ளது. இந்திய துருப்புகள் நெறிமுறைகளை மீறி சீன துருப்புகளை தாக்கியது.

கால்வான் பள்ளத்தாக்கு பகுதியின் இறையாண்மை எப்போதும் சீனாவுக்கு சொந்தமானது.இப்போது நடந்த சம்பவத்திற்கு சீனாவை குறைகூற முடியாது.

இந்தியா தனது முன்கள துருப்புக்களை ஒழுங்குபடுத்த வேண்டிய அதேவேளை அத்துமீறல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.