இன்றுமுதல் புதுக்குடியிருப்பு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் சமூக முடக்கம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 11 மணி குறித்த பிரதேசங்கள் முடக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.