கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை எடுத்தவர்கள் கைது.

கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச்சென்ற 11 பேர் கைது

பிரெஸ்பேர்ல் கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை எடுத்துசென்ற 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண இதனை தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பமுனுகம நீர்கொழும்பு கொச்சிக்கடை டுங்கல்பிட்டிய ஆகிய பொலிஸ்பிரிவுகளை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

டுங்கல்பிட்டிய பகுதியில் லொறியுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்,பமுனுகம பகுதியில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொச்சிக்கடையில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.