கொரோனாவிலிருந்து மீண்டார் சஜித்! கங்காராம விகாரையில் வழிபாடு.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரின் பாரியாரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், கங்காராம விகாரைக்குச் சென்ற அவர்கள், அங்கு ஆன்மீக வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

விரைவில் செயற்பாட்டு அரசியலுக்குள் சஜித் மீண்டும் திரும்புவார். எதிர்வரும் 22ஆம் திகதி பாராளுமன்ற அமர்விலும் பங்கேற்பார்.

Leave A Reply

Your email address will not be published.