இம்முறையும் வெளிநாட்டவர்களுக்கு ஹஜ் யாத்திரை தடை.

வெளிநாடுகளின் ஹஜ் யாத்திரிகர்களுக்கு இம்முறையும் சவூதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.

இதன்படி ,கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய ,சவூதி அரேபியாவில் வசிக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட 60 ஆயிரம் பேருக்கு மாத்திரம் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள அனுமதி உண்டு என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ,அதேநேரம், மக்காவுக்கான ஹஜ் யாத்திரை எதிர்வரும் ஜூலை நடுப்பகுதியில் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.