இலங்கைக்கு மேலும் 16 இலட்சம் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கும் சீனா!

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை ‘சினோபார்ம்’ தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவதற்கு சீனா தீர்மானித்துள்ளது.

இதன்படி 16 இலட்சம் டோஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொள்வனவு செய்துள்ள மேலும் 20 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் எதிர்வரும் 22ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளன என்று ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்தத் தடுப்பூசிகள் கிடைத்த பின்னர் நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேலும் விரைவுபடுத்த முடியுமாக இருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.