அரசியல் என்பது இலாபமீட்டக்கூடிய வர்த்தக முயற்சி – அநுரகுமார திசாநாயக்க

அரசியல் என்பது இலாபமீட்டக் கூடிய பாதுகாப்;பானதொரு வர்த்தக முயற்சியென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அடி மட்டத்திலிருந்து அரசியலிற்குள் பிரவேசிக்கும் ஒருவர் குறுகிய காலத்தில் மிகப்பெரிய செல்வந்தராக மாறுகின்ற நிலை மாறி அரசியலை மக்கள் சேவையாக மாற்ற மக்கள் ஒன்றிணைய வேண்டுமெனவும் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

அத்துடன் அரசியல் வாதிகள் இறுதியில் மறைந்து கொள்ளும் இடம், இனமும் மதமும் இருக்கின்ற வேளை மக்களிடையே உள்ள ஐக்கியமே ஆட்;சியாளர்களுக்கு எதிரான ஆயுதம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கியத்திற்காக முன்னிற்கும் ஒரே அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அதன் தலைவர் அநுரகுமார திசாநாக்க தெரிவித்துள்ளார்.

Comments are closed.