நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைபோல்….

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (10) முதல் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.*

கொவிட் தொற்று காரணமாக கடந்த ஒரு வருட காலமாக கல்வி நடவடிக்கைகள் இடைக்கிடை தடங்கல் ஏற்பட்ட நிலையில், கடந்த சில காலமாக மாணவர்கள் வகுப்பிற்கு பகுதி பகுதியாக அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, அனைத்து பாடசாலைகளிலும் இன்று முதல் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், பாடசாலைகளிலுள்ள சிற்றுண்டிசாலைகளை திறப்பதற்கு சுகாதார அமைச்சு இதுவரை அனுமதி வழங்கவில்லை.

அதனால், பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் வெளியிலிருந்து உணவை எடுத்து செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.