பொது மக்களது போராட்டங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடவில்லை : பொலிஸ் மா அதிபர்

பொது மக்களது போராட்டங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு தாம் போலீசாருக்கு தான் அறிவுறுத்தவில்லை என பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார்.

ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதே அது இடம்பெற்றுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி நிமல் கருணாசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.