வரிசையில் நிற்கும் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள வேண்டும் இராணுவத்தினர் – ஐ.நா. வலியுறுத்து.

இலங்கையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களின் மனநிலையைப் பாதுகாப்புப் படையினர் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

தனது ருவிட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புப் படையினர் அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்தினால் விசாரணை நடத்துமாறு அதிகாரிகளைத் தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவம் – பொதுமக்களிடையே நேற்று இடம்பெற்ற மோதலையடுத்து ஹனா சிங்கர் மேற்படிக் கருத்தை ருவிட்டரில் இன்று பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.