மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கும் பெற்றோல்.

மட்டக்களப்பு லங்கா ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிராந்திய ஊடகவியலாளர்கள், பொலிஸார் மற்றும் அரச ஊழியர்கள் ஆகியோருக்குப் பெற்றோல் விநியோகிக்கப்பட்டன.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் கே.செல்வராசாவின் மேற்பார்வையில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க முன்னிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குப் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.

மாவட்டத்திலுள்ள பிராந்திய ஊடகவியலாளர்கள் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் பெற்றோல் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.