மாணவர் பேரணிக்கு, பொலிஸாரின் எதிர்ப்பு : பலர் கைது ! (Video)

மருதானை டீன்ஸ் வீதிப் பகுதியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்த முடியாது, நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என போலீசார் தெரிவித்து அரகலய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முற்பட்ட போது ஏற்பட்ட வாய்தர்க்கங்களால் பலர் கைதாகியுள்ளனர்.

அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.