65 கோடிக்கும் அதிகமான பணம் PCR பரிசோதனைக்கு செலவு – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

கொவிட் – 19 வைரஸ் தொடர்பான PCR பரிசோதனைக்காக அரசாங்கம் 65 கோடிக்கும் அதிகளவான பணத்தை செலவிட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதுவரை செய்யப்பட்டுள்ள PCR பரிசோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான PCR பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் – 19 பரிசோதனை பிரிவில் நாளொன்றுக்கு PCR 500 பரிசோதனைகள் நடாத்தப்படுவதாகவும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நாடு முழுவதிலும் தேவையான இடங்களில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் கொவிட் – 19 வைரஸ் தாக்கிய நோயாளிகளை அடையாளம் காண்பதற்கு பயன்படுத்தும் வெற்றிகரமான முறை PCR பரிசோதனை ஆகும்.

இலங்கையில் PCR பரிசோதனை மேற்கொள்வதற்கு நபர் ஒருவருக்கு அரசாங்கம் 6500/=ஐ செலவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.