வவுனியாவில் வாக்குப் பெட்டிகள் அனுப்பிவைப்பு!

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று அனுப்பி வைக்கப்பட்டன.
நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுக்கள் மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து காலை முதல் அனுப்பி வைக்கப்பட்டன.
பொலிஸாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.