சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராட்டம்.

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்று திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ். தையிட்டியில் மக்களின் காணிகளை அடாத்தாகப் பிடித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தச் சட்டவிரோத விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில், அந்தப் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.