தென்னிலங்கையில் வயோதிபத் தம்பதி மர்மக் கொலை!

கம்பஹா மாவட்டத்தில் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னிமஹர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கணவரும், மனைவியும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கிரிந்திவெல, கன்னிமஹர பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய கணவரும், 79 வயதுடைய மனைவியுமே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் சடலங்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.