230 கிலோ கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் சிக்கினார்.

மன்னார் – இலுப்பைக்கடவை பகுதியில் 203 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

முழங்காவில் கடற்படை முகாமின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கிடமான படகொன்றைச் சோதனைக்குட்படுத்தியபோது, அதில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டது எனப் பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் வெல்லன்குளம் பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மன்னார் நீதிவான் நீமிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலுப்பைக்கடவைப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.