நளினி உட்பட 6 பேர் விடுதலையை எதிர்த்து இந்திய அரசு மறுசீராய்வு மனு! விசாரணை எப்போது?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இந்திய அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட்ட ஆறு பேர்

நளினி, பேரறிவாளன், முருகன் , சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் , ரவிச்சந்திரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அதில் பேரறிவாளன் கடந்த மே மாதம் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். இதே போல் தங்களையும் விடுவிக்கக் கோரி இதர ஆறுபேரும் மனுதாக்கல் செய்தனர்.

மறுசீராய்வு மனு

இதனை ஏற்று நவம்பர் 11ம் திகதி உச்சநீதிமன்றம் ஆறு பேரையும் விடுதலை செய்தது. இந்த நிலையில் உத்தரவை எதிர்த்து இந்திய அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இந்த சீராய்வு மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.