ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் கொழும்பில் வெட்டிக்கொலை.

கொழும்பு, மட்டக்குளிப் பிரதேசத்தில் நபர் ஒருவர் இன்று கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காரில் வந்த இருவர், இந்தப் படுகொலையை மேற்கொண்டனர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.