சிங்கள இளைஞர் ஒருவர் மாயம்! – மக்களின் உதவியை நாடியது பொலிஸ்.

மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள களமிறங்கியுள்ள பொலிஸார், பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

குறித்த இளைஞர் காணாமல்போயுள்ளார் அவரது தாயார் மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.

மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தைச் சேர்ந்த விதுஷிகா நவஞ்சன பண்டார என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

குறித்த இளைஞர் கடந்த ஜூன் மாதம் புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் துறவற வாழ்வுக்குச் சென்றுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம், தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக வீடு திரும்பிய அவர், கோயிலுக்குச் சென்றிருந்த நிலையில், காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடைசியாக குறித்த இளைஞர் தனது சகோதரியுடன் தொடர்புகொண்டு தான் கேகாலையில் இருக்கின்றார் என்று தெரிவித்துள்ளார். அதன் பின்னர் இளைஞர் தொடர்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காணாமல்போன இளைஞர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 – 8591418 (பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மாவனெல்ல), 035 2247222 (மாவனல்லை பொலிஸ் நிலையம்) ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.