கட்டாரில் இருந்து 398 பேருடன் இலங்கை வந்த விமானத்தில் 54 பேருக்குக் கொரோனா வைரஸ்

கட்டாரில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 22 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

கட்டாரில் இருந்து வந்த 32 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் நேற்று தெரிவித்திருந்தது.

அதற்கமைய கட்டாரில் இருந்த வந்த 54 பேர் நேற்று மாலை முதல் இன்று காலை 10 மணி வரை வரையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 398 பேருடன் கட்டாரில் இருந்து இலங்கை வந்த விமானம் வந்திருந்தது. அதில்
வந்த 54 பேருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.