யாழில் 14 வயது மாணவிக்குக் குழந்தை! – 73 வயது வயோதிபர் கைது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளார்.

சிறுமியின் கர்ப்பத்துக்குக் காரணம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 73 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முதியவர் சிறுமியின் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முதியவர் சிறுமியுடன் நெருங்கிப் பழகினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், விசாரணைகள் நடைபெறுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.