20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு வர்த்தமானியில் வௌியிடப்பட்டது

அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபு வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபு நீதி அமைச்சர் அலி சப்ரியால் நேற்று (02) பிற்பகல் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில், அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுவதற்காக அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைவு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.