அரையிறுதிக்கு தகுதி பெற்றது புத்தூர் கலைமதி விக

யாழ்ப்பாண மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன்
தெல்லிப்பளைமின்னலடியாக்கி
(M. A JACKY) விளையாட்டுக்கழகம் முதல்முறையாக. மின்னொளியில் நடத்தும் கரப்பந்தாட்ட சுற்று போட்டித் தொடரில் புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழக அணி அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.

இன்று (வியாழக்க்கிழமை) இரவு 8 மணிக்கு .கழக மைதானத்தில் இடம் பி பிரிவினருக்கான இரண்டாவது காலிறுதி யாட்டத்தில் அச்சுவேலி கலைமகள் விளையாட்டு கழகம் அணியை எதிர்து புத்தூர் கலைமதி விளையாட்டு கழகம் மோதியது
மூன்று செற்களைக் கொண்டதாக இடம் பெற்ற இந்த ஆட்டத்தில்
முதலாவது சுற்று ஆட்டத்தினை புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழக அணி 25:14 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது.

இரண்டாம் சுற்று ஆட்டத்தின் போது இரண்டு அணிியினரும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி தமது அணிக்காக மாறி மாறி புள்ளிகளைப் பெற்ற வண்ணம் இருந்தனர், இதனால் எந்த அணி வெற்றி பெறும் என தெரியாத நிலை காணப்பட்டது .கடைசியில் புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழக அணி 26:24 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி , பெற்று ஆட்டத்தினை
தம்வசப்படுத்திக் கொண்டது. இதன் முலம் புத்தூர் கலைமதி விளையாட்டுகழக அணி அரையிறுதி யாட்டத்திற்கு. தகுதி பெற்றது

Leave A Reply

Your email address will not be published.