பேராதனையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 18 வயது பிக்கு சாவு!

மண்மேடு சரிந்து விழுந்ததில் 18 வயது பிக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.

பேராதனை, ஏந்தடுவாவ புராதன விகாரை வளாகத்திலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை விகாரையின் மேல் முற்றத்தில் குறித்த தேரர் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையிலேயே மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் மண்ணுக்குள் புதையுண்டு படுகாயமடைந்த தேரர் பேராதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.