2-வது ஒருநாள் போட்டி நாளை சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில்……

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா போராடி வெற்றி பெற்றது. 350 ரன் இலக்கை நெருங்கி வந்த நியூசிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடக்கிறது. இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. நாளைய போட்டியில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து உள்ளது. இதனால் அந்த அணி வெற்றிக்காக போராடும்.

Leave A Reply

Your email address will not be published.