வீடொன்றிலிருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்பு!

வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எல்பிட்டியப் பொலிஸாருக்கு இன்று கிடைத்த தகவலின் பிரகாரம் இந்தச் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

70 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளனர்.

மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.