50000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக மாவட்ட ரீதியில் உள்ள வேலை அற்ற 50000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வானது மன்னார் பிரதேச செயளாலர் ம.பிரதீப் தலைமையில் மன்னார் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (04.09.2020) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் இடம் பெற்றது.

மன்னார் நகர் பிரதேச செயலக பிரிவில் பல்கலைகழக கல்வி மற்றும் உயர் தேசிய டிப்ளோமா சான்றிதல் உள்ள வேலையற்ற 103 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் மேற்படி வழங்கி வைக்கப்படதுடன் அவர்களுக்கான நியமன பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான தெளிவுபடுத்தலும் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேச செயலக உதவிபிரதேச செயளாலர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக கணக்காளர், நிர்வாக அதிகாரி ,பதிவாளர் உட்பட பலரும் கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.