தேசிய சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தடை : நீதிமன்ற உத்தரவு!

75 ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (04) கொழும்பில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நீதிமன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

சுதந்திர தினத்திற்கு எதிரான நாளைய பிரதான ஆர்ப்பாட்டம் கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பயங்கரவாதச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இதன்படி, 75 ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நாளைய தினம் எந்தப் போராட்டமும் நடத்தப்படக் கூடாது எனவும், காலி முகத்திடல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுத்து இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.