சத்தியாக்கிரகம் செய்தோர் மீது உயர் அழுத்த நீர்த்தாக்குதல் , தடியடி ( வீடியோ)

மருதானை எல்பிஸ்டன் திரையரங்கிற்கு அருகில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுக்கு எதிராக அமைதியாக சத்தியாக்கிரகம் செய்தோர் மீது நேற்று இரவு பொலிஸார் உயர் அழுத்த நீர்த்தாக்குதலையும் தடியடி தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்.

அவ்விடத்திற்கு வந்த மற்றொரு குழுவினர், அவர்களை அப்புறப்படுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

சுதந்திர விழாவை நடத்த அதிக பணம் செலவழித்ததை எதிர்த்து இந்த குழுவினர் சத்தியாகிரகம் நடத்தியது.

காவல்துறையினரும் , கலவர தடுப்புக் குழுவினரும் சத்தியாகிரகம் நடத்தியோரை துரத்திச் சென்று தடியடி நடத்தி, அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தியதையடுத்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறி வேறு இடத்தில் திரண்டனர்.

தாக்குதலுக்கு முன்னர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவ்விடத்திற்கு வந்து நீதிமன்ற உத்தரவைக் காட்டி அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்திய போதிலும், சத்தியாக்கிரகத்தை அமைதியான முறையில் விட்டுச் செல்ல நீதிமன்ற உத்தரவு இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

போலீசார் அங்கிருந்து சென்றதும் மற்றோர் கும்பல் வந்து சத்தியாக்கிரகம் நடத்தியோரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த கும்பல் அங்கிருந்து வெளியேறிய பின்னர், பொலிஸார் பாரிய நீர்த்தாக்குதலை நடத்தியதாகவும், பின்னர் அவர்களை துரத்திச் சென்று தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.