ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி மரணம் – சிலாபத்தில் சோகம்.

சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சிலாபம் – முகத்துவாரத்தில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 7 வயது மகள், 6 வயது மகன் மற்றும் 35 வயதுடைய தந்தை ஆகியோரே இன்று இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சிலாபம் முகத்துவாரத்திற்கு படகில் சென்ற இவர்கள் படகில் இருந்து இறங்கி அங்கு நீராடச் சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.