பஸ் மோதி வயோதிபப் பெண் பரிதாபச் சாவு! – சாரதி கைது.

சொகுசு பஸ்ஸில் மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை பிலியந்தலை – மிரிஸ்வத்த சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பிலியந்தலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பூ பறிப்பதற்காக வீட்டிலிருந்த வீதியைக் கடந்துச் சென்று மீண்டும் அதே வீதியைக் கடந்து வீடு திரும்ப முயற்சிக்கும் போது, பிலியந்தலையில் இருந்து கெஸ்பேவ நோக்கி பயணித்த சர்வதேச பாடசாலைக்குச் சொந்தமான சொகுசு பஸ்ஸில் மோதி அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் சாரதி கவனக்குறைவாகப் பஸ்ஸை செலுத்தியதே விபத்துக்குக் காரணம் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கெஸ்பேவ நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.