மைத்திரியைத் தூக்கிலிட்டுக் கொலை செய்ய வேண்டும்! – ‘மொட்டு’க் கட்சி ஆவேசம்.

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளைத் தூக்கில் தொங்கவிட்டுக் கொலை செய்ய வேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தண்டனை போதாது. இதைவிடப் பெரிதாக தண்டனை வழங்கி இருக்க வேண்டும்.

அப்பாவி மக்கள் கொல்லப்படும் வரை பார்த்துக்கொண்டிருந்த மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குற்றவாளிகளைத் தூக்கில் தொங்கவிட்டுக் கொலை செய்ய வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.