தேர்தல் நடக்குமா? இல்லையா? – ஆணைக்குழுவிடமே கேட்க வேண்டும் என்கிறார் பஸில் பதில்.

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடக்குமா? இல்லையா? என்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடமே கேட்க வேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது எங்களது கட்சியின் வேலை இல்லை. அது தேர்தல் ஆணைக்குழுவின் வேலை. இதனால் இது தொடர்பில் எம்மால் எதுவும் சொல்ல முடியாது.

தேர்தல் நடக்குமா? இல்லையா? என்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம்தான் கேட்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் யாரும் எமக்குச் சவால் அல்ல. நாம் வெற்றி பெறுவோம். 50 வீதத்துக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றுவோம்”- என்றார்.

Leave A Reply

Your email address will not be published.