ரகசியமாக சீனா செல்ல … சரக்கு முனையத்தின் வழியாக விமானம் ஏறினார் கோட்டா…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி ராஜபக்ஷவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனா செல்வதற்கான எதிர்பார்ப்புடன் மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதியின் பயணத்திற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணம் செலுத்தி விசேட விருந்தினர் அறை வழி (V.I.P. Lounge), சில்க்றோட் அல்லது கோல்ட்றோட் வழியாக வசதிகள் அல்லது சாதாரண பயணிகள் முனையமான கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகப் புறப்படும் வசதி உள்ள போதும் , அவர்கள் சரக்கு விமான நிலைய முனையத்தின் ஊடாக வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது .

இது ஒரு சிறப்பு நிலை என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை 12.25 மணிக்கு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH-178 மூலம் சீனா செல்ல புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.