தேர்தலைப் பிற்போடும் சூழ்ச்சிக்கு ஆதரவாகச் செயற்படும் அரச அச்சகர் – ஊழியர் சங்கத்தினர் சந்தேகம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடும் சூழ்ச்சிக்கு ஆதரவாக அரச அச்சகர் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் தமக்கு எழுகின்றது என்று அரச அச்சக ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

“தபால் மூலத்துக்கான 6 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் என்பது மிகவும் குறைந்த தொகை. அரச அச்சகத்தில் காணப்படும் அச்சிடும் திறனுக்கு அமைய, ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அதனை அச்சிட முடியும்.

எனவே, அச்சிடும் பணிகளில் ஏன் தாமதம் ஏற்பட்டது எனத் தெரியவில்லை.

தேர்தலைப் பிற்போடும் சூழ்ச்சிக்கு ஆதரவாக அரச அச்சகர் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது” – என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.