மாணவருக்கான இலவச பேருந்து சேவை ஆரம்பம்.

ஊஞ்சல்கட்டி, வெடிவைத்தகல்லு, பட்டிக்குடியிருப்பு, காஞ்சிரமோட்டை, கற்குளம், பட்டடைபிரிந்தகுளம், மருதோடை போன்ற பிரதேசங்களிலிருந்து ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயம், நெடுங்கேணி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு வருகை தரும் 83 மாணவர்கள் நீண்ட காலமாக போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வந்தனர்.

தற்போது நலன்விரும்பிகளின் நிதியீட்டத்தில் வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தினுடைய பேருந்து ஒன்று பாடசாலைச்சேவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரது இணைச்செயலாற்றுகையில் இச்சேவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.