விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு!

ஓட்டோவும் உழவு இயந்திரமும் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் காரைதீவு சண்முக வித்தியாலயத்துக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

ஓட்டோவில் பயணித்த குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். அதில் பயணம் செய்த மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு மாவட்டம், ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த மீராமுகைதீன் பாத்தும்மா (வயது 66) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் அக்கரைப்பற்றில் வசிக்கும் தனது மகளின் வீட்டுக்குச் செல்லும் வழியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் காரைதீவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அறுவடை செய்த நெல்லை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன் ஓட்டோ மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.