எதிர்க்கட்சித் தலைவர் – நியூசிலாந்து தூதுவர் சந்திப்பு!

இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அப்பிள்டனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குமாறு நியூசிலாந்து தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் வறுமையை ஒழிக்க நியூசிலாந்து அரசின் ஆதரவைக் கோரிய எதிர்க்கட்சித் தலைவர், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டு அரசியலில் தனித்துவ அடையாளத்தைப் பதித்து எதிர்க்கட்சியின் அரசியல் கட்சி என்ற வகையில் பிரபஞ்சம் மற்றும் மூச்சு வேலைத்திட்டங்கள் மூலம் நாட்டுக்குப் பெறுமதி சேர்த்ததை எதிர்க்கட்சித் தலைவரால் நினைவுகூரப்பட்டதோடு, நியூசிலாந்து தூதுவரின் பாராட்டும் கிடைக்கப் பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.