தபால் மூலம் வாக்களிக்கும் திகதிகள் குறித்த ஆணைய அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு மார்ச் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு மார்ச் 28, 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளரான சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (07) அறிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.