6 வயது சிறுமி அடித்துப் படுகொலை? – பொலிஸார் தீவிர விசாரணை.

சிறுமி ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாணந்துறை – ஹிரண, பின்கெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை 6 வயது சிறுமி சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் ஹிரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தாய் மற்றும் தாயின் சட்ட ரீதியற்ற கணவருடன் வசித்து வந்த குறித்த சிறுமி பல நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார் எனவும், அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமி இதற்கு முன்னர் பல தடவைகள் தாயின் சட்ட ரீதியற்ற கணவரால் தாக்கப்பட்டுள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கேட்டல் மற்றும் பேச்சு குறைபாடுகளைக் கொண்ட இந்தச் சிறுமியின் உடலில் பல தழும்புகள் மற்றும் வீக்கங்கள் காணப்படுக்கின்றன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மரணம் தொடர்பாக சிறுமியின் தாயான 25 வயதான பெண்ணும், அவரது சட்ட ரீதியற்ற கணவர் எனக் கூறப்படும் 29 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்

உயிரிழந்த சிறுமியின் சடலம், பிரேத பரிசோதனைக்காகக் களுபோவில – கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை ஹிரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.