ஏப்ரல் 25 தேர்தல் இல்லையேல் மாபெரும் போராட்டம் வெடிக்கும்! – சஜித் எச்சரிக்கை.

“தேர்தல்கள் ஆணைக்குழு இறுதியாக எடுத்துள்ள தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தே தீர வேண்டும். அரசு தேர்தலை மேலும் ஒத்திவைக்க முற்பட்டால் மக்கள் சக்தியை திரட்டி வீதியில் இறங்கி மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (09) உரையாற்றுகையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

அத்துடன், கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மீது பொலிஸாரால் நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களையும் எதிர்க்கட்சித் தலைவர் வன்மையாகக் கண்டித்தார்.

Leave A Reply

Your email address will not be published.