நீரில் மூழ்கி 10 சிறுவன் பரிதாப மரணம்!

சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் காலி – தலாபிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தடாகம் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

10 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் சடலம் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.