முடி சிறிதாக வெட்டியதால் வருத்தம்…தற்கொலை செய்துகொண்ட 8ஆம் வகுப்பு மாணவன்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான பாந்தரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சத்ருகன் பதக் என்ற 13 வயது சிறுவன் வசித்து வந்தார். 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் கடந்த செவ்வாய்கிழமை அன்று தனது உறவுக்கார இளைஞருடன் முடி திருத்தம் செய்ய சலூனுக்கு சென்றுள்ளார்.

தனக்கு ஸ்டைலாக ஹேர்கட் செய்ய வேண்டும் என மாணவன் சத்ருகன் சலூன் கடைக்காரரிடம் கோரியுள்ளான். ஆனால், சிறுவன் எதிர்பார்த்தபடி ஹேர் ஸ்டைல் வரவில்லை. மாறாக முடி சிறியதாக இருக்கும் படி சலூன் கடைகாரர் வெட்டியுள்ளார். இது சிறுவனுக்கு கடுமையான வருத்தத்தை தந்துள்ளது.

வீட்டிற்கு வந்து சிறுவன் கடும் சோகத்தில் இருந்த நிலையில், பெற்றோரும் சிறுவனின் இரு அக்காக்களும் அவனிடம் பேச்சு கொடுத்து சமாதானம் செய்து உற்சாகம் கொடுத்துள்ளனர். இருப்பினும், மனம் தேறாத சிறுவன் வீட்டில் உள்ளவர்கள் தூங்க சென்ற பின் இரவு 11.30 மணி அளவில் அவர்கள் வீடு இருந்த 16ஆவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இந்த சம்பவத்தை பார்த்து பதறிப்போன செக்யூரிட்டி வீட்டிற்கு தகவல் தரவே, சிறுவனை மருத்துவனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.

ஆனால்,ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இது சிறுவனின் குடும்பத்தாருக்கு மட்டுமல்லாது பலருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் தந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.