கத்தியால் வெட்டிக் குடும்பஸ்தர் படுகொலை!

கத்தியால் வெட்டிக் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரேவத்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹிரேவத்த கடற்கரைக்கு அருகில் மேலும் இருவருடன் மது அருந்திக் கொண்டிருந்த போது, அந்த இடத்துக்கு வந்த மற்றொரு நபர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், குறித்த இடத்துக்கு வந்த நபர் மது அருந்திக்கொண்டிருந்த நபரைக் கத்தியால் வெட்டினார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.