களுத்துறை ஹோட்டலில் இருந்து விழுந்த பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம்.

களுத்துறை நகரின் புகையிரத பாதைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து மாடிகளை கொண்ட தற்காலிக தங்குமிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (06) இரவு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை, நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவியின் பெற்றோரால் உடல் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி , நேற்று மதியம் மற்றுமொரு இளம் ஜோடியுடன் இணைந்து இளைஞர் ஒருவருடன் தற்காலிக விடுதிக்கு வந்து மூன்றாவது மாடியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

மாணவியின் சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு சற்று முன்னர் மாணவியுடன் வந்த மற்றைய தம்பதியினர் விடுதியை விட்டு வெளியேறியதுடன், அவருடன் வந்த இளைஞரும் பொலிஸாரின் விசாரணையில் அறையை விட்டு வெளியேறியுள்ளார்.

மாணவியின் உடலின் பல பாகங்களில் கீறல்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் அடி காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுத்துறை பிரிவு குற்றத்தடுப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.