வங்கக் கடலில் உருவானது மோக்கா புயல்… மே-14-ல் 145 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும்

வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. அந்தப் புயலுக்கு மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணியளவில் மோக்கா புயலாக வலுவடைந்தது. போர்ட் பிளேயருக்கு மேற்கு-தென்மேற்கே சுமார் 510 கி.மீ காக்ஸ் பஜாரின்(வங்காளதேசம்) தென்-தென்மேற்கே 1,210 கி.மீ மற்றும் சிட்வே(மியான்மர்) க்கு தென்-தென்மேற்கில் 1120 கி.மீ தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக தீவிரமடைந்து இன்று நள்ளிரவில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது.

அதன்பிறகு, அது படிப்படியாக மீண்டும் நாளை காலை முதல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக் கடலில் மே 12 மாலையில் அதி தீவிர புயலாக புயலாக மேலும் வலுவடையும். இது 13-ம் தேதி மாலையில் அதன் உச்சக்கட்டத்தை எட்டும்.

அதன்பிறகு, மே 14 காலை முதல் சிறிது வலுவிழந்து தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரை மற்றும் கியாக்பியு இடையே மே 14 ஆம் தேதி முன்பகல் நேரத்தில் அதிகபட்சமாக 120-130 கிமீ இடையே 145 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும்.

Leave A Reply

Your email address will not be published.