காலியில் தேங்காய் வியாபாரி சுட்டுக்கொலை!

காலி பொலிஸ் பிரிவில் வயோதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தேங்காய் வியாபாரியான குறித்த நபர், இன்று காலை வீதியோரத்தில் தேங்காய்களை விற்றுக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதன்போது 68 வயதான தேங்காய் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவர் ஏழு பிள்ளைகளின் தந்தையாவார்.

Leave A Reply

Your email address will not be published.